அறநிலையத்துறையே ஆலயத்தை விட்டு வெளியேறு.. இந்து முன்னணியின் தீர்மானம்..

Update: 2023-12-27 01:08 GMT

தமிழகத்தில் உள்ள கோவில்களை விட்டு இந்து சமய அறநிலைத்துறை வெளியிட வேண்டும் என்றும், அதற்காக அனைத்து இந்துக்களும் தொடர்ந்து போராட முன் வர வேண்டும் என்றும் திருப்பூரில் நடந்த ஹிந்து முன்னணி மாநில பொதுக்குழுவில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. கோவில்களை இந்துக்கள் வசம் ஒப்படைத்து விட்டு இந்து சமய அறநிலையத்துறை கோவிலை விட்டு வெளியேற வேண்டும் என்று திருப்பூரில் நடந்த இந்து முன்னணி மாநில பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


இந்து முன்னணி மாநில பொதுக்குழு கூட்டம், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஊத்துக்குளி அருகே, சசூரி கல்லுாரி வளாகத்தில் நேற்று மாலை நடந்தது. கூட்டத்துக்கு தலைமை வகித்த மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம், 'ஸ்ரீராம ஜென்ம பூமி வெற்றி வரலாறு' என்ற புத்தகத்தை வெளியிட்டார். இந்த புத்தக வெளியீட்டு விழாவின் போது சசூரி கல்லுாரி நிறுவனர் கந்தசாமி உள்ளிட்டோர் பெற்றுக் கொண்டனர். குறிப்பாக இந்த பொதுக்கூட்டத்தில் இந்துக்கள் அனைவரும் கோவில்களை பாதுகாக்க முன்வர வேண்டும்.


அறநிலையத்துறையை வெளியேற்ற போராட முன்வருதல், தீவிரவாதிகள் விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்தல், தீவிரவாத செயல்கள் தலைதுாக்காத வகையில் தமிழகத்தை பாதுகாக்க போலீசாரும், தமிழக அரசும் முன்வர வேண்டும். அது மட்டும் கிடையாது நீதிபதிகள் தங்களுடைய தீர்ப்புகளின் பின்னணியில் அரசியல் சாயும் பூசி நீதித்துறையின் மாண்பை அவமதிக்கும் வகையில் திமுகவின் செயலை கண்டித்தல், திருச்செந்தூர் துவங்கி ஸ்ரீரங்கம் கோயில் வரை பக்தர்கள் மீது நடந்த தாக்குதல்கள் தொடர்பாக ஊழியர்கள் செய்யும் செயல்கள் ஆகியோரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்பது தொடர்பாக பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News