பங்குனி மாத சிறப்புகள்: எப்படி வழிபட்டால் முழு பலன்களைப் பெறலாம்?

பங்குனி மாதத்தில் கடவுளை வழிபடுவதன் மூலம் முழு பலனைப் பெறுவது எப்படி?

Update: 2022-04-03 01:47 GMT

புரட்டாசி மாதம் எப்படி தெய்வீகமான மாதமாக கருதப்டுகிறதோ? அதற்கு இணையான கருதப்படும் ஒரு மாதம் பங்குனி மாதம் ஆகும். மற்ற எல்லா மாதங்களை போலவே பங்குனி மாதத்திலும் அமாவாசை தினம் வருகிறது. அன்றைய தினம் என்னென்ன? செய்தால் நமக்கு மேலான பலன்கள் கிடைக்கும். மேலும் பங்குனி மற்றும் அந்த நாட்களில் எப்படி வழிபடுவதன் மூலம் முழு பலனை பெற முடியும் என்பதை தற்போது பார்ப்போம். பங்குனி மாதம் தினமும் அதிகாலையில் குளித்து முடித்து, ஆற்றங்கரை அல்லது குளக்கரையில் வேதியர்களை கொண்டு மறைந்த உங்கள் முன்னோர்கள், உறவினர்களுக்கு திதி தர்ப்பணம் தர வேண்டும் அமாவாசை அன்று செய்வது மிகவும் நன்மை பயக்கும்.


சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அமாவாசை திதி, தர்ப்பணம் தர இயலாதவர்கள் அன்றைய தினம் உங்கள் வீட்டிலேயே முன்னோர்களை வழிபட்டு கருப்பு மற்றும் வெள்ளை எள் கலந்த சாதத்தை காகங்களுக்கு உணவாக வைக்க வேண்டும். யாசகர்களுக்கு அன்னதானம் செய்யலாம். குழந்தை பேறில்லாமல் தவிப்பவர்கள் பங்குனி மாத விரதம் இருந்து அம்மன் கோவில்களுக்கு சென்று வழிபட அந்த அம்மனின் அனுக்கிரகத்தால் நிச்சயம் புத்திர பாக்கியம் கிடைக்கும்.தொழில் மற்றும் வியாபாரங்களில் ஈடுபடுபவர்கள் தமிழ் வருடத்தின் கடைசி மாதமான பங்குனி மாத தினத்தில் திருஷ்டி பூசணிகாய் வாங்கி, உங்கள் வியாபார இடங்களை திருஷ்டி கழித்து அதற்குரிய நேரத்தில் உடைக்க வேண்டும். இப்படி செய்வதால் உங்களுக்கு இந்த ஆண்டு ஏற்பட்ட தோஷங்கள் அனைத்தும் நீங்கும். 


சிறப்பு மிக்க பங்குனி மாதத்தில் வருகிற அமாவாசை தினத்தில் மேற்கண்டவற்றை செய்வதால் பித்ரு சாபம் மற்றும் குல சாபங்களால் உங்களுக்கு ஏற்படுகின்ற கஷ்டங்கள் அனைத்தும் நீங்க பெறும். திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடைபெறுவதில் நீடித்த தடை, தாமதங்கள் நீங்கும். உணவிற்கு கஷ்டப்படும் நிலை என்றென்றும் ஏற்படாமல் தடுக்கும். பங்குனி மாதத்தில் அனைத்து நாட்களிலும் கோயிலுக்கு சென்று வருவது மிக்க பலனை தரும் மேலும் செல்வ செழிப்புடன் வாழ்வதற்கு உதவும். 

Input & Image courtesy: Malaimalar news

Tags:    

Similar News