பெருமாளின் 11 திவ்ய தேசங்கள் அமைந்த ஒரே இடம்

திருநாங்கூரில் பெருமாளுக்குரிய 11 திவ்ய தேசங்கள் ஒரே இடத்தில் அமைந்துள்ளன.

Update: 2023-10-03 10:30 GMT

திருமால் என்று அழைக்கப்படும் பெருமாளுக்கு 108 திவ்ய தேசங்கள் இருக்கின்றன. அவற்றில் 11 திவ்ய தேசங்கள் ஒரே இடத்தில் அமைந்த இடம் தான் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருநாங்கூர். சிவபெருமானை மதிக்காமல் யாகம் செய்த தட்சனை அவனது மகளும் ஈசனின் மனைவியுமான தாட்சாயணி யாக சாலைக்குச் சென்று தட்டி கேட்டாள். ஆனால் அவளுக்கு அவமானமே மிஞ்சியது. இதனால் அவள் யாககுண்டத்தில் விழுந்து உயிர்துறந்தாள். இதனால் கோபம் கொண்ட சிவபெருமான் ருத்ரதாண்டவம் ஆடினார்.


ஈசனின் ஜடாமுடி அவிழ்ந்து முடி தரையில் படும்போதெல்லாம் அதிலிருந்து ருத்ரமூர்த்திகள் வெளிப்பட்டனர். இவ்வாறு பதினொரு ருத்ரர்கள் வெளிவந்தனர். உக்கிரமாக இருந்த அந்த ருத்ரர்களை பார்த்து தேவர்கள் அஞ்சினர். பெருமாள் 11 வடிவங்கள் எடுத்துச் சென்று 11 ருத்திரங்களையும் சாந்தப்படுத்தினார். அந்த 11 பெருமாள் வடிவங்களுமே திருநாங்கூரில் கோவில் கொண்டுள்ளனர்.

Similar News