மாதாந்திர வழிபாட்டிற்காக சபரிமலை ஐயப்பன் கோயில் இன்று நடை திறப்பு !

மாதாந்திர வழிபாட்டிற்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறக்கப்பட்டு நாளை முதல் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு அனுமதி அளிக்கப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

Update: 2021-09-16 04:27 GMT

மாதாந்திர வழிபாட்டிற்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறக்கப்பட்டு நாளை முதல் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு அனுமதி அளிக்கப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

வழிபட விரும்பும் பக்தர்கள் தங்கள் பற்றி இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று தேவஸ்வம் போர்டு தெரிவித்துள்ளது. தினமும் 15 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி வழங்குவதற்கு முடிவு செய்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.

வழிபாட்டிற்கு வருகின்ற பக்தர்கள் 48 மணி நேரத்திற்கு முன்னர் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்து கொரோனா நெகட்டிவ் சான்று வைத்திருக்க வேண்டும். அல்லது இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திய சான்றை சமர்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Source, Image Courtesy: Puthiyathalamurai


Tags:    

Similar News