மாதாந்திர பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் இன்று திறப்பு.!

கேரளாவில் உலக புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் உள்ளது. கொரோனா தொற்று காரணமாக பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், மாதாந்திர பூஜைகளுக்காக இன்று முதல் ஐந்து நாட்களுக்கு திறக்கப்படுகிறது.

Update: 2021-05-14 03:49 GMT

கேரளாவில் உலக புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் உள்ளது. கொரோனா தொற்று காரணமாக பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், மாதாந்திர பூஜைகளுக்காக இன்று முதல் ஐந்து நாட்களுக்கு திறக்கப்படுகிறது.

கேரளாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை மிக தீவிரம் அடைந்துள்ளது. இதனால் மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இதனால் அம்மாநில அரசு வழிபாட்டுத்தலங்களை முற்றிலும் திறப்பதற்கு தடை விதித்திருந்தது.


 



இந்நிலையில், சபரிமலை ஐயப்பன் கோயில் மலையாள மாதமான எடவம் மாத துவக்கத்தை முன்னிட்டு இன்று முதல் ஐந்து நாட்களுக்கு மீண்டும் திறக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த ஐந்து நாட்களிலும் மாதாந்திர பூஜைகள் மற்றும் சடங்குகள் செய்யப்படும் என்றும், கொரோனா பொதுமுடக்கம் காரணமாக பக்தர்களுக்கு அனுமதி இல்லை எனவும் கோயில் நிர்வாகம் சார்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News