சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு பழனியில் சிறப்பு பூஜை.!

சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு பழனியில் சிறப்பு பூஜை.!

Update: 2020-12-27 11:30 GMT

சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு பழனி திரு ஆவினன்குடி கோயிலில் உள்ள சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெற்றது. 

இன்று சனீஸ்வர பகவான் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு இடம்பெயரும் சனிப்பெயர்ச்சி நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதனையொட்டி காரைக்காலில் உள்ள சனீஸ்வர பகவான் கோயிலில் நேற்று இரவு முதலே பக்தர்கள் கூடியிருந்தனர். அதிகாலை முதலே சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு பழனி திருஆவினன்குடி திருக்கோயிலில் தனிச்சன்னதியில் அமர்ந்துள்ள சனிஸ்வர பகவானுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் யாகவேள்வி நடைபெற்றது.

அதிகாலை 4 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், தொடர்ந்து மாரிகழி மாத திருப்பள்ளி எழுச்சியும், அக்னி கார்ய ஹோமமும் நடைபெற்றது. அதிகாலை 5.22 மணிக்கு தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு சனீஸ்வர பகவான் இடம்பெயர்ந்த நேரத்தில் மஹா தீபாராதனை நிகழ்ச்சி நடைபெற்றது.

கொரோனா அச்சம் காரணமாக சனிப்பெயர்ச்சி நேரத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்நிகழ்ச்சியில் பழனிகோயில் உதவி ஆணையர் செந்தில்குமார் உட்பட ஊழியர்கள் சிலர் மட்டும் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News