இந்தியாவிலேயே முதன் முறையாக மிகப்பெரிய 'ராகவேந்திரா' சுவாமி சிலையை நிறுவிய நடிகர் ராகவா லாரன்ஸ் !

இந்தியாவிலேயே மிகப்பெரிய ராகவேந்திரா சுவாமி சிலையை நடிகரும், நடன இயக்குனருமான ராகவா லாரன்ஸ் நிறுவியுள்ளார். இந்த சிலைக்கு இன்று பிரதிஷ்டை செய்கிறார்.

Update: 2021-10-29 03:14 GMT

இந்தியாவிலேயே மிகப்பெரிய ராகவேந்திரா சுவாமி சிலையை நடிகரும், நடன இயக்குனருமான ராகவா லாரன்ஸ் நிறுவியுள்ளார். இந்த சிலைக்கு இன்று பிரதிஷ்டை செய்கிறார். இந்தியாவில் முதன் முறையாக 15 அடி உயரம் செதுக்கப்பட்ட ராகவேந்திர சுவாமியின் பளிங்கு சிலைக்கு இன்று (அக்டோபர் 29) பிரதிஷ்டை செய்ய உள்ளார் ராகவா லாரன்ஸ். இதில் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது பற்றி அவர் மேலும் கூறும்போது, சாதாரண மனிதனமாக இருந்த என்னை இவ்வளவு உயரத்துக்கு அடையாளம் காட்டியவர் ராகவேந்திர சுவாமி. அவர் எனக்கு அளித்த அருள்தான் என்று நான் நம்புகிறேன். இந்த நேரத்தில் ராகவேந்திர சுவாமிக்கு மிகப்பெரிய சிலையை உருவாக்குவதே எனது வாழ்நாள் கனவாக இருந்தது. அந்த கனவு தற்போது ஈடேறியுள்ளது என்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

மேலும், எனது ரசிகர்கள் மற்றும் அனைத்து ராகவேந்திரர் பக்தர்களுக்கும் அனைவருக்குமே நான் பிரார்த்தனை செய்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். சினிமாத்துறையில் நடிகர் ராகவா லாரன்ஸ் மிகவும் வித்தியாசமாக உள்ளார். மற்ற நடிகர்ளுடன் ஒப்பிடுகையில் மிகவும் ஆன்மீக நம்பிக்கை உடையவராகவும் அவர் விளங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source, Image Courtesy: Social Media

Tags:    

Similar News