திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வீதி உலா.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்.!

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வீதி உலா.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்.!

Update: 2021-02-20 10:43 GMT

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் 11 மாதங்களுக்கு பின்னர் வீதி உலா நடைபெற்றது.

கொரோனா பரவல் காரணமாக அனைத்து கோயில்களும் கடந்த ஆண்டு பூட்டப்பட்டது. இதனை தொடர்ந்து முக்கிய விழாக்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. இதனால் வழக்கமாக செய்யப்படும் பூஜைகள் தவிர்த்து பெரிய விழாக்கள் நிறுத்தப்பட்டிருந்தது. இதனிடையே ஊரடங்கு படிப்படியா தளர்த்தப்பட்ட பின்னர் கோயில்களில் முக்கிய பூஜைகளில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

இந்நிலையில், மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் 11 மாதங்களுக்கு பிறகு வீதி உலா நடைபெற்றது. மாசி உற்சவத்தையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு சாமி தரிசனம் செய்தனர்.
 

Similar News