தமிழகத்தில் கோயில் உட்பட வழிபாட்டு தலங்கள் திறப்பு.!
அதே சமயம் கோயில்களில் ஆகம விதிப்படி தினமும் பூஜைகள் மட்டும் நடைபெற்று வந்தது. பக்தர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படவில்லை.
தமிழகத்தில் கொரோனா முழு ஊரடங்கு காரணமாக கோயில், சர்ச், மசூதி உள்ளிட்ட அனைத்து மத வழிபாட்டு தலங்களும் கடந்த 3 மாதங்களாக மூடப்பட்டிருந்தது.
அதே சமயம் கோயில்களில் ஆகம விதிப்படி தினமும் பூஜைகள் மட்டும் நடைபெற்று வந்தது. பக்தர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படவில்லை.
இதனிடையே ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் இன்று முதல் அறிவிக்கப்படும் என தமிழக அரசு கூறியது. அதன்படி இந்து சமய அறநிலைய துறையின் கீழ் உள்ள கோயில்கள் உட்பட அனைத்து மத வழிபாட்டு தலங்களும் முழுமையாக திறக்கப்பட்டு, வழிகாட்டு நெறிமுறைகளுடன் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.