கேது பகவானின் அருள் பெற்று கெடுதலான பலன்களில் இருந்து விடுபட செய்ய வேண்டியவை!

கேது பகவானின் அருளைப் பெற வணங்க வேண்டிய தெய்வங்களும் செய்ய வேண்டிய வழிபாடும் பற்றி காண்போம்.

Update: 2023-10-06 11:15 GMT

ராகுவைப் போல கொடுப்பானும் இல்லை கேதுவைப் போல கிடைப்பானும் இல்லை என்பர். கேது ஞான காரகன் ஒருவர் ஜாதகத்தில் லக்னத்தில் கேது இருந்தால் ஞானத்தை அள்ளி வழங்குவார் . கேது பகவான் மனித தலையும் பாம்பு உடலும் கொண்டவர். பாம்பு தலையும் மனித உடலையும் கொண்டவர் ராகு பகவான். கேது பகவான் உங்களுக்கு கேட்டதும் வரம் தர நவகிரகத்தில் உள்ள கேதுவை வழிபாடு செய்யலாம். கேதுவிற்கு அதி தேவதையாக விளங்கும் விநாயகப் பெருமான் பிரம்மா ஆகியோரையும் வழிபடலாம்.

ஆனைமுகம் என்பதால் யானைக்கு கரும்பு ,வாழைப்பழம் போன்றவற்றை உணவாக அளித்தால் கேது திசை நடைபெறும் போது நற்பலன்களை வாரி வழங்குவார். பிரம்மாவை வழிபட திருவையாறு அருகில் உள்ள கண்டியூருக்கு செல்லலாம். அங்குள்ள பிரம்மதேவனை வணங்கினால் கேதுவின் அருளுக்கு பாத்திரமாகலாம். சிவாலயங்களில் வீற்றிருக்கும் பிரம்மாவையும் வணங்கலாம். கீழ்பெரும்பள்ளம் கேதுவிற்குரிய தலமாகும் அங்கு சென்று வழிபட்டாலும் கேது பகவானின் அருளைப் பெறலாம்.

SOURCE :DAILY THANTHI

Similar News