திருஇந்தளுர் பரிமள ரெங்கநாதம் ஆலய சொர்க்கவாசல் திறப்பு.. சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த பெருமாள்.!

திருஇந்தளுர் பரிமள ரெங்கநாதம் ஆலய சொர்க்கவாசல் திறப்பு.. சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த பெருமாள்.!

Update: 2020-12-25 06:59 GMT

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை திருஇந்தளுரில் அமைந்துள்ள பரிமளரெங்கநாதர் ஆலயம். பெருமாள் பள்ளிகொண்ட நிலையில் அருள்புரியும் ஸ்ரீரெங்கம் உள்ளிட்ட பஞ்ச அரங்க ஆலயங்களுல் இது, 5வது ஆலயமாக திகழ்கிறது.


திருமங்கையாழ்வார் உள்ளிட்ட ஆழ்வார்களால் பாடல்பெற்ற 1,500ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்த ஆலயம், சந்திரனின் சாபம் தீர்த்ததும், 108 வைணவ திவ்ய தேசங்களில் 22வதுமான இந்த ஆலயத்தில் ஏகாதேசியை முன்னிட்டு, இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் பெருமாள் தங்க ரெத்தின சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். அதனைத்தொடர்ந்து சிறப்பு அபிஷேக ஆராதனைகளுக்குப்பின், பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, பெருமாள் வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளினார்.


இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Similar News