இந்த மாதமும் திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை.. ஏமாற்றத்தில் பக்தர்கள்.!

கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த கடந்த ஆண்டு 2020 மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் பவுர்ணமி கிரிவலத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-06-24 05:29 GMT

கொரோனா ஊரடங்கு நீடித்து வருவதால் திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் திகழ்ந்து வருகிறது. ஒவ்வொரு மாதமும் பவுர்மணி நாட்களில் கோவிலுக்கு பின்புறம் அமைந்துள்ள மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் தூரம் பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.




 


இதற்காக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மற்ற மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிகின்றனர். கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த கடந்த ஆண்டு 2020 மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் பவுர்ணமி கிரிவலத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இன்று (வியாழக்கிழமை) அதிகாலை 3.10 மணிக்கு தொடங்கி இன்று நள்ளிரவு 12.55 மணிக்கு நறைவடைய உள்ளது. கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு சில தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணாமக இந்த மாதமும் கிரிவலத்துக்கு தடை விதிக்கப்படுகிறது. எனவே பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வர வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது என கூறப்பட்டுள்ளது.

Similar News