தரையில் விழுந்து சாஸ்டங்க நமஸ்காரம் செய்வதால் ஏற்படும் ஆச்சர்யம் என்ன?
தரையில் விழுந்து சாஸ்டங்க நமஸ்காரம் செய்வதால் ஏற்படும் ஆச்சர்யம் என்ன?
நம் பாரம்பரியத்தில் நமஸ்கரித்தல் என்பது புனிதமான காரியம். மூத்தவர்களை காணும்பொழுது, ஒருவருக்கு நன்றி சொல்லும் பொழுது, ஒருவரை வரவேற்கும் பொழுது, இறைவனை வழிபடும் பொழுது ஏராளமான இடங்களில் நமஸ்காரம் செய்து இரு கைகளை கூப்பி வணங்குவது நம் மரபு.
அந்த வகையில் கடவுளை வணங்கும் பொழுது பிரத்தியேகமாக சாஷ்டாங்க நமஸ்காரம் செய்வது வழக்கம். சாஷ்டாங்க நமஸ்காரம் என்பது ஒரு மனிதனின் மொத்த அங்கங்களும் தரையில் படுமாறு விழுந்து வணங்குவது.
இந்த வகையான நமஸ்காரத்தை தண்டக நமஸ்காரம் மற்ற சில பெயர்களாலும் அழைக்கிறார்கள், சாஷ்டாங்க நமஸ்காரம் செய்வதால் ஏற்படும் பலவிதமான பலன்களின் முக்கியமானது ஒருவருடைய அகங்காரம் அழிந்து அவரிடம் நிதானமான தன்மை உருவாகிறது.
சாஷ்டாங்க நமஸ்கார செய்கிற பொழுது நீங்கள் முழுமையான சரணாகதியை வெளிப்படுத்துகிறார்கள். இவ்வாறு செய்கிற பொழுது இறைவனிடம் “எனக்கு நிகழ்கிற அனைத்திற்கும் இனி நீயே கதி” “ என அவர் பாதம் சரணடைந்து நம் உள உணர்வை வெளிப்படுத்த முடியும். அவரிடம் ஆசி பெறும் பொருட்டே இந்த வடிவிலான நமஸ்காரம் வழிபாடுக்கு உகந்ததாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
இந்த வகையிலான நமஸ்காரம் செய்கிற பொழுது அகங்காரம் அழிவதோடு மட்டுமல்லாமல் உடலின் அங்கங்கள் அனைத்தும் தரையில் படுமாறு இருக்கிறது மார்பு, தலை, கை, கால் மூட்டு, உடல், மனம் எண்ணம் என நம்முடைய சகலமும் தரையில் படுமாறு இறைவனை வணங்குகிறோம். ஆனால் இந்த வகையிலான முழுமையான சாஷ்டாங்க நமஸ்காரம் என்பது பெரும்பாலும் ஆண்கள் மட்டுமே செய்யக்கூடியது.
பெண்கள் இந்த வகையிலான சாஷ்டாங்க நமஸ்காரம் செய்ய பரிந்துரைக்கப்படுவதில்லை புராணங்களின்படி சாஷ்டாங்க நமஸ்காரம் செய்யும்பொழுது பெண்ணினுடைய கருப்பை மற்றும் மார்பு தரையில் படும் வாய்ப்புகள் உண்டு.