உங்கள் ராசிக்கு எதை தானம் வழங்க வேண்டும்? சாஸ்திரம் காட்டும் வழிமுறைகள்.

உங்கள் ராசிக்கு எதை தானம் வழங்க வேண்டும்? சாஸ்திரம் காட்டும் வழிமுறைகள்.

Update: 2021-02-26 05:45 GMT

ஒரு தனிநபர்  நன்மையை பெற வேண்டுமெனில் தன்னை மட்டுமே நம்பி இருக்க வேண்டும். தம்முடைய கடின உழைப்பு தான் ஒரு மனிதரின்  வெற்றிக்கு காரணமாக அமைகிறது. இருப்பினும் ஜோதிடத்தில் நம்பிக்கை இருப்பவர்களுக்கு ஜோதிடம் சார்ந்த சில பரிகாரங்கள் உதவிகரமாக அமையும். அந்த வகையில் நம் பிரார்த்தனைகள் இறைவனை எளிதில் சென்று சேர ஒரு கருவியாக இருப்பது நம் அர்பணிப்புகள்.

ஒவ்வொருவருடைய ராசி பலனுக்கு தகுந்தார் போல் அவர்கள் எவற்றையெல்லாம் தானமாக வழங்கலாம்?

 மேஷ ராசி அன்பர்கள்,  இறைவனுக்கு மாதுளம் பழத்தையும் இனிப்பு வகைகளையும் படைத்து வந்தால் நல்ல மாற்றங்கள் நிகழும் என சொல்லப்படுகிறது.

 அடுத்ததாக ரிஷப ராசி காரர்கள் கடவுளுக்கு வெள்ளை நிறத்திலான இனிப்புகளை அர்ப்பணிக்கலாம். உதாரணமாக பால் கொண்டு தயாரிக்கக் கூடிய இனிப்பு வகைகள்.

 மிதுன ராசியை சேர்ந்தவர்கள் முந்திரியை கொண்டு செய்யக் கூடிய இனிப்பு வகைகளை கடவுளுக்கு படைத்து வழங்குவதால் அவர்களுக்கு வாழ்வில் மகிழ்ச்சிகரமான சூழல் அமையும் என சொல்லப்படுகிறது.

 கடகத்தில் பிறந்தவர்களுக்கு தேங்காயை அர்ப்பணிக்கலாம். தேங்காயில் செய்த இனிப்பு வகைகளை அர்பணித்தால், அவர்கள் விரும்பிய வரங்கள் பிராப்தமாக பெரும் வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

சிம்ம ராசியில் பிறந்தவர்கள் கடவுளுக்கு வெல்லத்தால்  ஆன இனிப்பு வகைகளை படைத்து வணங்கினால் மகிழ்ச்சியான வாழ்க்கையும் பொருளாதார மேம்பாடும் கிடைக்கும் என சொல்லப்படுகிறது.

 கன்னி ராசிக்காரர்கள் கடவுளுக்கு துளசி இலைகளையும் மற்றும் பழவகைகளையும் பச்சை நிறத்திலான பழவகைகளையும் அர்ப்பணித்து வணங்கினால் நல்ல மாற்றம் கிடைக்கும் என சொல்லப்படுகிறது.

துலாம் ராசி காரர்களுக்கு சிவப்பு நிறத்திலான பழங்கள், உதாரணமாக ஆப்பிள் போன்ற பழங்களை வைத்து வழிபடுவதால் அவர்கள் வாழ்வில் ஏற்படக்கூடிய தடைகள் எல்லாம் விலகி எதிர்பாராத நன்மைகள் நடக்கும் என நம்பப்படுகிறது.

விருச்சிக ராசி காரர்கள் கடவுளுக்கு வெல்லத்தால்  ஆன பொருட்களை வைத்து வழிபடுவதால் ஆச்சரியமூட்டும் வகையில் பல நல்ல மாற்றங்கள் நிகழும் என ஜோதிடர்கள் சொல்கின்றனர்.

தனுசு ராசிக்காரர்கள் கடலை மாவினால் ஆன இனிப்பு வகைகளை அற்பணித்து வணங்குவது அவர்களுடைய ஜாதகப்படி மிகவும் நன்மை பயப்பதாக இருக்கிறது.

மகர ராசிக்காரர்கள் கருமை நிறத்திலான இனிப்புவகைகள் கருமை நிறத்திலான பழவகைகளை கடவுளுக்கு அர்ப்பணித்து வணங்குவதால் எதிர்பாராத பல நன்மைகள் கிடைக்கப் பெறும்.

கும்பராசியில் இருப்பவர்கள் கடவுளுக்கு சப்போட்டா பழத்தையும் மற்றும் ப்ரவுன் நிறத்திலான இனிப்பு வகைகளை வைத்து வழிபடுவது பல்வேறு அதிர்ஷ்டங்களையும் சவுபாக்கியங்களையும் ஈர்ப்பதாக அமையும்.

மீன ராசிக்காரர்கள் வாழைப்பழத்தையும் இளஞ்சிவப்பு நிறத்திலான இனிப்பு வகைகளையும் குறிப்பாக கிருஷ்ணருக்கு படைத்து வழிபட்டு வந்தால் நன்மை இருக்கும் என சொல்லப்படுகிறது.

இறைவனை மனதார நினைத்து வணங்கினால் நமக்கு சகலவிதமான இடர்களும் தடைகளும் நீங்கி போகும் என்றபோதும் இது போன்ற சில குறிப்பிட்ட வகையிலான பரிகாரங்களும் குறிப்பிட்ட வகையிலான தகவல்களும் நமக்கு கூடுதலான வழிகாட்டுதல்களை தருகின்றன

Similar News