ஏகப்பட்ட கட்டுப்பாடு போட்ட பிசிசிஐ - இதுக்கு மேல இங்கிலாந்து போகணுமா என்ன? அரண்டு கிடக்கும் இந்திய கிரிக்கெட் அணி!

Update: 2021-05-12 12:47 GMT

இங்கிலாந்து கிளம்பும் முன் இந்திய வீரர்களில் எவருக்காவது கொரோனா தொற்று ஏற்பட்டால், அவர்கள் இந்த தொடரை மறந்துவிட வேண்டியது தான் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இது குறித்து பிசிசிஐ வெளியிட்ட அறிவிப்பில், மும்பையில் நடத்தப்படும் சோதனையில் யாருக்கேனும் கொரோனா உறுதி செய்யப்பட்டால், அவருக்கு என்று தனி விமானம் எல்லாம் ஏற்பாடு செய்யப்பட மாட்டாது. அதனால் வீரர்கள் மும்பைக்கு வரும் வரை தங்களை கவனமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

அப்படி பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டால், தங்களுடைய இங்கிலாந்து பயணம் முடிவுக்கு வந்துவிட்டது என்று எண்ணிக் கொள்ளலாம்.

மூன்றரை மாதங்களுக்கு மேல் இங்கிலாந்தில் இருக்க வேண்டிய நிலை வரும் என்பதால், வீரர்கள் தங்கள் குடும்பத்தினரையும் உடன் அழைத்துச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

இதனால் வீரர்களின் குடும்பத்தினருக்கும் கொரோன சோதனைகள் நடத்தப்படும். மேலும் இங்கிலாந்துபுறப்படும் முன் வீரர்களுக்கு 2 டோஸ் தடுப்பூசியும் போட்டிருக்க வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகளில் ஆட இந்திய அணி வரும் 2ம்தேதி லண்டன் புறப்படுகிறது. இந்த அணியில் 20 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். 4 மாற்று வீரர்கள் உடன் அழைத்து செல்லப்படுகிறார்கள். 

Similar News