செசபிள் மாஸ்டர்ஸ் செஸ் தொடர்: இறுதிப்போட்டிக்கு முன்னேறிய பிரக்ஞானந்தா!

Update: 2022-05-25 05:06 GMT

செசபிள் மாஸ்டர்ஸ் செஸ் தொடரில் இறுதிப்போட்டிக்கு இந்திய வீரர் பிரக்ஞானந்தா முன்னேறியுள்ளார். இவர் இறுதிப்போட்டியில் சீன வீரர் டிங் லிரியனை எதிர்த்து பலப்பரீட்சை நடத்த உள்ளார் என்பது குறப்பிடத்தக்கது.

உலக சாம்பியன் செஸ் தொடரில் முதல் முறையாக இந்தியர் ஒருவர் இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனை நிகழ்த்தியுள்ளார். அரையிறுதி போட்டியில் நெதர்லாந்து வீரர் அனிஷ் கிரியை வீழ்த்தினார். இதனையடுத்து இறுதிப்போட்டியில் சீன வீரர் டிங் லிரியனை எதிர்த்து பலப்பரீட்சை நடத்துகிறார். பிரே ஆஃப் முறையில் நடந்த அரையிறுதியில் 1.5-0.5 என்ற புள்ளிக் கணக்கில் பிரக்யானந்தா வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: News 18 Tamilnadu

Image Courtesy: Scroll.in

Tags:    

Similar News