இந்தியா அணியால் புறக்கணிக்கப் பட்ட பிரித்வி ஷா... இங்கிலாந்து அணிக்கு விளையாட போகிறாரா?

Update: 2023-07-05 07:29 GMT

இந்தியாவில் நடைபெற்ற வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் மூலமாக முதன முதலில் அறிமுகமானவர்தான் பிரித்வி ஷா. முதல் போட்டியிலேயே சதம் விளாசி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த பிரித்வி ஷா அனைத்து நபர்களும் போற்றப்பட்டார். இந்திய அணியின் மூலம் இவர் சிறப்பாக தன்னுடைய கிரிக்கெட் தொடர்களை விளையாடி கொண்டு தான் வந்தார்.


ஆனால் திடீரென இவருடைய ஆட்டம் சொதப்பலாக அமைந்த பிறகு இந்திய அணி காரணமாக ஒதுக்கப்பட்டார். பிரித்வி ஷாவின் கிரிக்கெட் வாழ்க்கை 2020ஆம் ஆண்டுடன் முடிவுக்கு வந்தது. இவர் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருடன் இந்திய அணியில் இருந்து முழுவதுமாக நீக்கப்பட்டார்.


இந்தியாவில் நடைபெறும் போட்டியில் இந்திய அணி வீரர்கள் பட்டியலில் இவருடைய பெயர் இடம்பெறவில்லை என்பது ரசிகர்களுக்கு சிறிது சோகத்தை ஏற்படுத்துவது. இந்திய டாப் ஆர்டரில் விளையாட அதிக போட்டிகள் இருப்பதால், பிரித்வி ஷாவுக்கு வாய்ப்பு கிடைப்பது அவ்வளவு எளிதல்ல. அவர் விரைவில் இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட் ஆட முடிவு எடுத்துள்ளார். இங்கிலாந்தின் நார்த்தன்டன்ஷயர் கிளப் அணிக்காக பிரித்வி ஷா தற்போது ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News