விராட் கோலியும் என் மகன்தான்.. வெஸ்ட் இண்டீஸ் வீரரின் தாய் நெகிழ்ச்சி சந்திப்பு..

Update: 2023-07-24 02:46 GMT

இந்தியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தற்போது சிறப்பாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக இதில் இந்திய மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இடையில் ஆட்டங்கள் மிகவும் பரபரப்பாக நடந்து வருகிறது. இந்த ஒரு போட்டியின் போது தான் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 500 வது முறையாக பங்கேற்று சாதனை படைத்து இருக்கிறார். இது ஒரு பக்கம் இருந்தாலும் இந்தியா தற்பொழுது சிறப்பாக விளையாடிய தான் வருகிறது.


விராட் கோலியை பார்ப்பதற்கு பல்வேறு ரசிகர்கள் பட்டாளமும் சர்வதேச மைதானங்களிலும் குவிந்து வருவதாக தகவல் வெளியாக இருக்கிறது. குறிப்பாக இந்திய வீரர்களின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன் அகத்துகளும் விராட் கோலியின் அதிரடி ஆட்டங்களை பார்ப்பதற்கு நேரடியாகவே ரசிகர்கள் பெருமளவில் உற்சாகமாக அங்கு காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் விக்கெட் கீப்பர் ஜோஷ்வா சில்வாவின் தாய், விராட் கோலியின் ஆட்டத்தை நேரில் பார்ப்பதற்காக ட்ரினிடாட் மைதானம் வந்தார்.


இதனை களத்திலேயே ஜோஷ்வா சில்வா விராட் கோலியிடம் சொல்லி மகிழ்ச்சியடைந்தார். இந்த நிலையில்தான் இரண்டாம் நாள் ஆட்டத்தின் போது விராட் கோலியை நேரில் சந்திப்பதற்காக அவர் வருகை தந்து இருந்தார். குறிப்பாக அவர் விராட் கோலியை தான் எப்படியாவது சந்தித்த வேண்டும் என்று வீரர்களின் பேருந்து முன் ஜோஷ்வா சில்வா மற்றும் அவரது தாய் காத்திருந்தனர். இதனையறிந்த விராட் கோலி, உடனடியாக அவர்களை சந்தித்தார். அப்போது விராட் கோலியை கட்டியணைத்து, முத்தம் கொடுத்து அன்பை வெளிப்படுத்தினார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News