மழை இல்லனா நாங்கள் வென்று இருப்போம்... வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஆணவப் பேச்சு...

Update: 2023-07-26 04:44 GMT

வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை வென்றது. சர்வதேச அளவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மிகவும் சிறப்பான முறையில் தோல்விக்கு பிறகு மீண்டும் வரும் வகையில் விளையாடி வருகிறது. இரண்டாவது டெஸ்டில் கடைசி நாள் ஆட்டத்தில் இந்திய அணிக்கு கைவசம் எட்டு விக்கெட்டுகள் இருந்தது. இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றிக்கு 289 ரன்கள் தேவைப்பட்டது. முதல் இன்னிங்சில் ஆடுகளத்தில் படுத்து தூங்கிவிட்டு தற்போது வீரவசனம் பேசி இருக்கிறார்.


இந்த முறை இந்திய அணியின் ஆட்டம் சிறப்பான வகையில் நடைபெற்றது. இதன் காரணமாக இவர்கள் அதிக ரன்களை பெற்று இந்திய அணி இந்த ஒரு போட்டியில் வெற்றி பெற்று இருக்கிறது. போட்டி மழையால் கைவிடப்பட்ட பிறகு செய்தியாளரிடம் பேசிய கேப்டன் பிராத்வெயிட், "இந்த டெஸ்டில் நாங்கள் பேட்டிங்கில் எங்களுடைய போராட்ட குணத்தை வெளிப்படுத்தினோம். நாங்கள் இந்தியாவுக்கு எதிராக பேட்டிங்கில் நன்றாகவே சண்டையிட்டோம். எனினும் முதல் இன்னிங்சில் நாங்கள் இருபது ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்தோம்.


நாங்கள் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாக விளையாட விரும்புகிறோம். ஆனால் திடீரென்று மழை காரணமாக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் எங்களால் பங்கேற்க முடியாமல் போய்விட்டது. இல்லையென்றால் இந்திய அணியை நாங்கள் பந்தாடி இருப்போம்" என்ற ஆவண பேச்சை வெளிப்படுத்தி இருக்கிறார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News