யாரு சாமி நீ... முன்னணி வீரர்களின் சாதனையை முறியடித்த சூர்யகுமார் யாதவ்...

Update: 2023-08-10 04:55 GMT

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டு டி20 போட்டிகளின் போது இந்தியா ஒரு போட்டிகளிலும் எதிரணி ஒரு போட்டிகளிலும் வெற்றி பெற்றது. தற்போது மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி களம் இறங்கி விளையாடியது. ஆனால் இதில் இந்திய அணி வீரர்கள் பெருமளவில் சொதப்பி இருந்தார்கள். குறிப்பாக முன்னணி வீரர்கள் கூட நன்றாக விளையாட்டில் கவனம் செலுத்தவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டு முன் வந்தது. இதன் காரணமாக இந்த தொடரை இந்தியா கை நடுவ விடும் என்ற கருத்துக்களும் இடம்பெற்றது.


இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் ஜெய்ஸ்வால் 1 ரன்னிலும், சுமன் கில் 6 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதுக்கு அப்புறம் தான் கலர் இறங்கியவர் சூரியகுமார் யாதவ். குறிப்பாக இவர் களம் இறங்கிய பிறகு ஒட்டுமொத்த வெஸ்ட் இண்டீஸ் அணி பவுலர்களையும் வெளுத்து கட்டினார். ஒவ்வொரு ஓவருக்கும் ஸ்கூப் ஷாட், ராம்ப் ஷாட் என்று பந்துகள் பவுண்டரியை எல்லையில் பறந்துகொண்டே இருந்தது. இதன்மூலம் 23 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார்.


இதன்பின்னர் இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த சூர்யகுமார் யாதவிற்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இதுவரை இவர் ஆட்டநாயகன் விருது பெறுவது பன்னிரண்டாவது தடவை. எனவே இதன் மூலம் 12 வது ஆட்ட நாயகன் விருதை பெற்ற இவர் ரோகித் சர்மாவின் சாதனையை முறியடித்து இருக்கிறார்.. மேலும் விராட் கோலியின் சாதனை முறியடிப்பதற்கு இன்னும் 3 ஆட்டநாயகன் விருதை பெற வேண்டும்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News