இந்திய அணியின் தோல்விக்கு இதுதான் காரணம்.. மனம் திறந்த கேப்டன் ஹர்திக் பாண்டயா..

Update: 2023-08-16 05:46 GMT

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவி இருக்கிறது. குறிப்பாக இந்திய அணியின் தோல்வியை தொடர்ந்து பல்வேறு நபர்களும் அது குறித்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் எந்த கட்டத்தில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது, தாங்கள் எதில் சொதப்பி இருக்கிறோம் என்பது குறித்தாக கேப்டன் ஹர்திக் பாண்ட்டியா ஒப்புக்கொண்டு இருக்கிறார்.


இது குறித்து அவர் கூறும் பொழுது, பத்து ஓவருக்கு பிறகு ஆட்டத்தில் உத்வேகத்தை இழந்துவிட்டோம். குறிப்பாக நான் களம் இறங்கிய பொழுது சூழ்நிலையை சரியாக பயன்படுத்திக்கொள்ள தவறிவிட்டேன். இத்தனைக்கும் எனக்கான நேரத்தை எடுத்துக் கொண்டேன். ஆனால் நினைக்கும் படி அதிரடியாக முடிக்க இயலவில்லை மற்றவர்கள் உண்மையிலேயே நன்றாக விளையாடினார்கள். நான்தான் திட்டமிட்டபடி செயல்படாததால் ரன் வேகம் தளர்ந்து போனது.


இந்த தொடரில் ஜெய்ஷ்வால், திலக் வர்மா,முகேஷ் குமார் மிகவும் நன்றாக விளையாடி இருக்கிறார்கள். ஒவ்வொரு இளம் வீரர்களும் தங்களது திறமைகளையும் வழிகாட்டி வருகிறார்கள், பொறுப்பையும் எடுத்துக் கொண்டு அர்ப்பணிப்புடன் விளையாட்டு விதத்தை பாராட்டி இருக்கிறேன். ஹர்திக் தலைமையில் கேப்டனாக இந்திய அணி தோல்வியை தழுவிய முதல் 20 ஓவர் இதுதான். இதற்கு முன்பு 20 தொடர்களை இவர் தலைமையில் இந்திய அணி கைப்பற்றி இருக்கிறது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News