அதிரடி காட்டிய விராட் கோலி.. எந்த ஆட்டத்தில் தெரியுமா..

Update: 2023-08-30 05:09 GMT

IPL பாணியில் இந்திய அணி வீரர்கள் தங்களுக்குள்ளே இரண்டு அணியாக பிரிந்து 50 ஓவர் கிரிக்கெட் போட்டியில் விளையாடி இருக்கிறார்கள். எதற்கு இப்படி போட்டிகளை நடத்தப்படுகிறது என்றால் இந்திய அணியில் பேட்டிங் திறமையை கண்டு கொள்வதற்காக பேட்ஸ்மேன்கள் மட்டும் ஒரு இன்னிங்ஸில் விளையாடுகிறார்கள். இந்த இன்னிங்ஸில் அவர்களுடைய திறமை மேலும் மெருகுற்றப்படுகிறது. அந்த வகையில், ரோகித் சர்மா, விராட் கோலி, ஸ்ரேயாஸ், ராகுல் ஆகியோர் இந்த பயிற்சி ஆட்டத்தில் விளையாடி இருக்கிறார்கள்.


அதன் ஸ்கோர் விவரம் தற்போது வெளியாகி இருக்கிறது. இதில் கேப்டன் ரோகித் சர்மா 4 பந்துகளை எதிர் கொண்டு டக் அவுட் ஆகி ஏமாற்றம் கொடுத்து இருக்கிறார். மற்றொரு தொடக்க வீரரான சுமன் கிலும் விராட் கோலி இணைந்து அதிரடியாக விளையாடி இருக்கிறார்கள். இதில் 35 பந்துகளை எதிர் கொண்டு 52 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்து இருக்கிறார்.


சிறப்பாக விளையாடிய விராட் கோலி அசுரத்தனமாக ரன்களை குவித்திருக்கிறார். ஏற்கனவே விராட் கோலி அதிரடியான பேட்ஸ்மேன் என்பதை இந்திய ரசிகர்கள் அறிந்ததே. அந்த வகையில் ரசிகர்களுக்கு ஏமாற்றம் கொடுக்காமல் தன்னுடைய திறமையை அதிகரிக்கும் வகையில் விராட் கோலியின் இந்த ஒரு விளையாட்டு அமைந்து இருக்கிறது. 123 பந்துகளை எதிர்கொண்ட விராட் கோலி 160 ரன்கள் குவித்து அங்கிருந்தவர்களை ஆச்சரியப்பட வைத்திருக்கிறார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News