உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி.. இந்திய அணியில் இந்த வீரருக்கு இடமா..

Update: 2023-09-05 03:26 GMT

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இன்னும் வெகு சில மாதங்களில் தொடங்க இருக்கிறது. அதாவது பத்து அணிகள் பங்கேற்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் மாதம் ஐந்தாம் தேதி தொடங்கி நவம்பர் 19ஆம் தேதி வரை இந்தியாவில் நடைபெறுகிறது. இந்தியாவில் சுமார் 10க்கும் மேற்பட்ட முக்கிய நகரங்களில் இந்த போட்டி வெகு விமர்சியாக நடைபெற இருக்கிறது. இந்தியாவில் நடைபெறும் காரணத்திற்காக இந்திய ரசிகர்கள் மத்தியில் உலக கோப்பையை இந்தியா நிச்சயம் வெல்ல வேண்டும் நம் நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்ற ஆவலில் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறார்கள்.


அந்த வகையில் தற்பொழுது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக இந்திய அணியில் 18 பேர் இடம் பெற்று இருந்தார்கள். அதிலிருந்து உலக கோப்பைக்கு 15 பேர் கொண்ட அணி இறுதி செய்யப்படுகிறது. இதில் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் லோகேஷ் ராகுல் காயத்தில் இருந்து முழுமையாக குணமடைந்து முழு உடல் தகுதியை அடைந்து இருப்பதாக தேசிய கிரிக்கெட் வாரியம் தற்போது உறுதி செய்து இருக்கிறது.


எனவே இந்திய அணியில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக கண்டிப்பாக ராகுல் நல்ல ஒரு கம்பை கொடுப்பார் என்று கூறப் பட்டிருக்கிறது. ஏற்கனவே உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக இந்திய அணியில் இடம் பெற்று வீரர்கள் பட்டியலில் தற்போது ராகுலும் சேர்க்கப்பட்டு இருக்கிறார்.

Input & Image courtesy:News

Tags:    

Similar News