உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி.. இறுதியாக முடிவாகிய இந்திய அணி..

Update: 2023-09-06 14:42 GMT

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி 13 பேர் கொண்ட இந்திய வீரர்கள் பெயர்கள் தற்போது பட்டியலில் இடம் பெற்று இருக்கிறது. உலக கோப்பை கிரிக்கெட் போட்டி 10 நாடுகளை சேர்ந்த அணிகள் பங்கேற்கும் பிரம்மாண்டமான போட்டியாகும். இந்த போட்டி இந்த முறை இந்தியாவில் நடைபெற இருக்கிறது. இந்தியாவில் உள்ள முக்கியமான பத்து நகரங்களில் இந்த போட்டிகள் நடைபெறுகிறது. பல்வேறு சர்ச்சைகள் மற்றும் பதட்டங்களுக்கு பிறகு இந்த போட்டி தற்போது நடைபெற இருக்கிறது.


இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் நடப்பு சாம்பியன் ஆன இங்கிலாந்து, பாகிஸ்தான் உள்ளிட்ட பத்து அணிகள் பங்கேற்கும் 13 வது உலகக்கோப்பை தொடர் இதுவாகும். தொடக்கமானது இந்தியாவில் உள்ள அகமதாபாத் ஸ்டேடியத்தில் நடை பெறுகிறது. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு 15 பேர் கொண்ட இந்திய வீரர்கள் பெயர்கள் நேற்று அதிகாரப்பூர்வமான பட்டியில் வெளியானது. இதில் ஆசிய போட்டிக்கான 18 பெயர் கொண்ட அணியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் பிரசாந்த் கிருஷ்ணா, மாற்று வீரர் சஞ்சு, இளம் இடக்கை பேட்ஸ்மேன் திலக் வர்மா ஆகியோர் இல்லாமல் மற்ற 15 பேர் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள்.


இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியும் வழிநடத்துவதற்காக ரோகித் சர்மா கேப்டன் ஆகவும், ஹர்திக் துணை கேப்டன் ஆகும் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். ஏற்கனவே டி20 உலக கோப்பையில் இந்தியா பட்டத்தை நழுவு விட்டதற்கு பல்வேறு தரப்பிலிருந்து ஏமாற்றங்கள் கிளம்பின. அந்த வகையில் தற்போது அவற்றையெல்லாம் முறியடித்து இந்தியா ஒரு நல்ல கம்பாக்கி கொடுக்கும் என்று ஒரு நம்பிக்கையில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News