இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு.!

Update: 2021-03-20 04:15 GMT

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி நான்கு டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஐந்து டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. இதை தொடர்ந்து மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் வென்று சாதனை படைத்த நிலையில் ஐந்து டி-20 போட்டிகள் கொண்ட தொடர் விறுவிறுப்பாக அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அடுத்ததாக மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.


அந்த தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்திய அணியின் கேப்டன் வீராட் கோலி தலைமையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிகள் தொடரில் புதிதாக இந்திய ஒருநாள் அணியில் பிரஜித் கிருஷ்ணா மற்றும் சூரியக்குமார் யாதவ் இடம் பெற்றுள்ளனர். சூரியக்குமார் யாதவ் டி-20 தொடரில் அசத்தி வரும் நிலையில் ஒரு நாள் அணியிலும் இடம் பிடித்துள்ளார். மேலும் தமிழக வீரர்கள் வாஷிங்டன் சுந்தர் மற்றும் நடராஜன் ஒரு நாள் அணியில் இடம்பிடித்துள்ளனர்.


பாண்டிய பிரதர்ஸ் ஒரு நாள் அணியில் மீண்டும் இடம்பெற்றுள்ளனர்.விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா (துணை கேப்டன்), ஷிகர் தவான், சுப்மான் கில், ஸ்ரேயாஸ் ஐயர், சூரியகுமார் யாதவ், ஹார்டிக் பாண்ட்யா, ரிஷாப் பந்த் (விக்கெட் கீப்பர்), கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்), யுஸ்வேந்திர சாஹல், குல்தேப் , கிருனல் பாண்ட்யா, வாஷிங்டன் சுந்தர், டி நடராஜன், புவனேஷ்வர் குமார், எம்.டி. சிராஜ், பிரசீத் கிருஷ்ணா, ஷார்துல் தாக்கூர்.

Tags:    

Similar News