இந்திய மற்றும் இங்கிலாந்து இடையிலான மூன்று ஒருநாள் போட்டிகள் தொடர் நாளை தொடக்கம்.!

Update: 2021-03-22 13:30 GMT

இந்திய  மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கிலும், ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-2 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. அடுத்ததாக இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நாளை புனே மைதானத்தில் துவங்க உள்ளது. ஏற்கனவே டெஸ்ட் மற்றும் டி20 தொடரை கைப்பற்றிய இந்திய அணி இந்த ஒருநாள் தொடரையும் கைப்பற்ற ஆர்வம் காட்டும் என்று தெரிகிறது.



 


அதேவேளையில்ஏற்கனவே இரண்டு தொடர்களை இழந்த இங்கிலாந்து அணி இந்த ஒரு நாள் தொடரை கைப்பற்ற முயற்சிக்கும் என்பதால் இந்த தொடர் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. நாளை துவங்க உள்ள முதல் போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது குறித்த சிறு அலசல் இந்த பதிவில் காண்போம். இந்திய அணி டி20 தொடரில் கடைசியாக நடைபெற்ற இரண்டு போட்டியிலும் வெற்றி பெற்றிருப்பதால் அதே நம்பிக்கையுடன் முதலாவது போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்ளும்.எனவே இங்கிலாந்து அணி நிச்சயம் இந்த போட்டியில் தங்களது ஆதிக்கத்தை தொடர விரும்பும். இருப்பினும் தற்போது நடைபெற்று முடிந்த டி20 தொடரில் கோலி, ரோகித் சர்மா, ரிஷப் பண்ட், ஹர்டிக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் சிறப்பான பார்மில் உள்ளனர். அதுமட்டுமின்றி பவுலிங்கில் புவனேஸ்வர் குமார், சிராஜ், நடராஜன், சாஹல் என அனைவரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர்கள் என்பதால் இந்திய அணியும் பலமாக இருக்கும் என்று தெரிகிறது.

Tags:    

Similar News