காயம் காரணமாக இங்கிலாந்து மற்றும் ஐபிஎல் தொடர்களில் இருந்து ஷ்ரேயஸ் ஐயர் விலகல்.!

Update: 2021-03-24 13:00 GMT

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் தற்பொழுது புனேவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்ற நிலையில் இந்த போட்டியில் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் நேற்றைய போட்டியின் போது இந்திய வீரர் ஷ்ரேயஸ் ஐயர் இடது தொல்பட்டையில் அடிபட்டு ஆட்டத்தின் நடுவில் வெளியேறினார்.


இந்நிலையில் ஆட்டத்தின் முடிவில் அவருக்கு செய்யப்பட்ட மருத்துவ பரிசோனையில் காயம் பெரிய அளவில் இருப்பதால் இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக மீதமுள்ள இரண்டு ஒருநாள் போட்டிகளிலிருந்தும் ஷ்ரேயாஸ் ஐயர் விலகுகிறார். இதனை பிசிசிஐ அதிகாரபூர்வ அறிவித்துள்ளது. இதை தொடர்ந்து அடுத்த மாதம் தொடங்க உள்ள ஐபிஎல் தொடரின் முதல் பாதி லீக் போட்டிகளில் இருந்து விலகும் நிலை ஷ்ரேயஸ் ஐயருக்கு ஏற்பட்டுள்ளது. ஷ்ரேயஸ் ஐயர் ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனாக உள்ளார். இந்நிலையில் இது டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு பெரிய இழப்பாக கூறப்படுகின்றது.

Tags:    

Similar News