இங்கிலாந்து அணியின் கேப்டன் மோர்கன் ஒருநாள் போட்டியில் இருந்து விலகல்.!

Update: 2021-03-26 07:15 GMT

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் பங்கேற்று விளையாடி வருகின்றனர். முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று புனே மைதானத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில் முதல் ஒருநாள் போட்டியிலேயே இந்திய அணியின் ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோருக்கு காயம் ஏற்பட்ட நிலையில் ஷ்ரேயஸ் ஐயர் தொடரில் இருந்தே விலகி உள்ளார்.


இந்திய அணிக்கு இந்த நிலை என்றால் இங்கிலாந்து அணியிலும் வீரர்களை காயங்கள் விட்டுவைக்கவில்லை. இந்நிலையில் இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மோர்கன் கை வீரலில் ஏற்பட்ட காயம் காரணமாக மீதமுள்ள இரண்டு ஒருநாள் போட்டிகளிலில் இருந்து விலகி உள்ளார்.


இது இங்கிலாந்து அணிக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. அதை தொடர்ந்து இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மென் சாம் பில்லிங்ஸ் முதல் போட்டியிலேயே காயம் காரணமாக இந்த போட்டியிலும் விலகி உள்ளார்.

Similar News