மூன்றாவது ஒருநாள் போட்டியில் தமிழக வீரர் நடராஜன் அணியில் சேர்ப்பு.!

Update: 2021-03-28 08:00 GMT

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் முதலிரு போட்டிகள் முடிவடைந்த நிலையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று சமநிலையில் உள்ளன. இந்நிலையில் தொடரின் முடிவைத் தீர்மானிக்கும் முக்கியமான கடைசி போட்டி இன்று புனே மைதானத்தில் நடைபெற உள்ளது.இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி கோப்பையை கைப்பற்றும் என்பதால் இரு அணிகளுக்கும் இடையே போட்டி மிகப் பலமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் பலம் வாய்ந்த இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி சொந்த மண்ணில் தொடரை கைப்பற்ற ஆர்வம் காட்டும் என்பதால் இந்த போட்டியின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இங்கிலாந்து அணியில்  டாம் க்ர்ரன் பதிலாக மார்க் வுட் அணியில் இணைக்கப்பட்டுள்ளார். இந்திய அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டு குல்திப் யாதவ் பதிலாக தமிழக வீரர் நடராஜன் அணியில் இணைந்துள்ளார். 

Similar News