டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு அக்ஷார் படேலுக்கு கொரோனா.!

Update: 2021-04-03 10:45 GMT

இந்தியாவில் வரும் 9ம் தேதி ஐபிஎல் டி-20 கிரிக்கெட் தொடர் பிரமாண்டமாக தொடங்க உள்ளது. இதற்காக அனைத்து ஐபிஎல் அணிகளும் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கொரோனா அச்சுத்தல் காரணமாக இந்தாண்டு ஐபிஎல் தொடரும் பார்வையாளர்கள் இன்றி போட்டிகளை நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது. இந்நிலையில் வீரர்களுக்கு பிசிசிஐ கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்நிலையில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் ஆல் ரவுண்டர் அக்ஷார் படேலுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.


டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் மிகமுக்கியமான வீரராக இருந்த அக்ஷார் படேல் தற்போது கொரோனா தொற்று காரணமாக தனிமைபடுத்தலில் உள்ளார். ஏற்கனவே மும்பை மைதான ஊழியர்களுக்கு கொரோனா உறுதியாகி இருப்பது பெரிய அதிர்ச்சி ஏற்படுத்திய நிலையில் இந்த தகவல் ஐபிஎல் தொடரை பாதிக்கும் வகையில் உள்ளது. இந்தியாவில் தற்பொழுது கொரோனா பதிப்பு அதிகரித்து வரும் நிலையில் ஐபிஎல் தொடர் நடப்பது பெரிய சவாலாக இருக்கும் என தெரிகிறது.

Tags:    

Similar News