சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஒருவருக்கு கொரோனா.!

Update: 2021-04-04 04:30 GMT

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் பிரமாண்டமாக வரும் ஏப்ரல் 9ம் தேதி சென்னையில் தொடங்க உள்ளது. ஐபிஎல் 14 வது சீசனின் முதல் டி-20 போட்டியில் மும்பை இன்டியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றனர். இரண்டாவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டெல்லி கேப்பிடல்ஸ் அணியை மும்பையில் எதிர்கொள்கிறது. அனைத்து ஐபிஎல் அணிகளும் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் ஆல் ரவுண்டர் அக்ஷார் படேலுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.


 இது பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அணியின் நிர்வாகி ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இது சென்னை அணி ரசிகர்களிடையே பெரும் பீதியை கிளப்பியுள்ளது. அந்த சென்னை அணியின் நிர்வாகி வீரர்கள் யாரிடம்‌ தொடர்பில் இல்லை என தகவல் வந்துள்ளது. எனவே சென்னை அணியின் வீரர்கள் யாருக்கும் பாதிப்பு ஏற்படாது என தெரிகிறது.


இந்தியாவில் தற்பொழுது கொரோனா பதிப்பு அதிகரித்து வருகிறது எனவே ஐபிஎல் தொடரை‌ நடத்தி முடிப்பதில் பிசிசிஐக்கு பெரிய சவாலாக இருக்கும் என்பதில் சந்தோகமில்லை.

Tags:    

Similar News