ப்ளே ஆஃப் சுற்றுக்கு சென்னை அணி தகுதிபெறாது கவுதம் கம்பீர் கருத்து.!

Update: 2021-04-07 13:45 GMT

ஐபிஎல் 14 வது சீசன் டி-20 கிரிக்கெட் தொடர் வரும் ஏப்ரல் 9ம் தேதி சென்னையில் தொடங்கி நடைபெற உள்ளது. முதல் லீக் போட்டியில் மும்பை இன்டியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றனர். இரண்டாவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள்‌ மோதவுள்ளனர். இந்நிலையில் அனைத்து ஐபிஎல் அணிகளும் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தியாவில் தற்பொழுது கொரோனா பதிப்பு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக ஐபிஎல் தொடர் சிறப்பாக நடத்த முடிப்பது கடினமாக இருக்கும் என்ற நிலையை உள்ளது.


இந்நிலையில் முன்னாள் இந்திய வீரர் கவுதம் கம்பீர் ஐபிஎல் தொடர் தொடங்க உள்ள நிலையில் தனது கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாது என தெரிவித்துள்ளார். இந்த கருத்தை சென்னை ரசிகர்கள் மீம்ஸ்களாக பதிவிட்டு வருகின்றனர்.


இந்த ஆண்டு சென்னை அணி கடந்த ஆண்டை விட பலமானதாக உள்ளது. புதிதாக மோயின்‌ அலி மற்றும் கிருஷ்ணப்பா கௌதம் ஆகிய வீரர்களை புதிதாக ஏலத்தில் எடுத்துள்ளது. மீண்டும் சென்னை அணியில் சுரேஷ் ரெய்னா இணைத்துள்ளார். இது சென்னை அணிக்கு பெரிய பலத்தை கொடுக்கும் என நம்பப்படுகின்றது.

Tags:    

Similar News