இன்று கோலகலமாக தொடங்குகிறது ஐபிஎல் தொடர்.!

Update: 2021-04-09 05:15 GMT

இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டு முதல் தற்போது வரை நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் இதுவரை 13 சீசன் நிறைவடைந்துள்ளது. இந்த ஐபிஎல் தொடரை அனைவரும் ஐபிஎல் திருவிழா என்றே கூறுவார்கள். இந்தாண்டு நடைபெறும் 14வது சீசன் இன்று(ஏப் 9) முதல் மே 30 வரை நடைபெற இருக்கிறது. ஆவலுடன் காத்திருந்த இந்த தொடர் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது.


முதல்போட்டியில் ஐந்து முறை கோப்பைகளை வென்ற மும்பை இந்தியன்ஸ் மற்றும் ஒரு முறை கூட கோப்பை வெல்லாத ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மோதுகிறது. இந்த போட்டி இன்று மாலை 7.30 மணியளவில் தொடங்கும். இதற்காக இரு அணி வீரர்களும் கடந்த சில வாரங்களாகவே கடுமையான பயிற்சி மேற்கொண்டுள்ளனர்.மும்பை இந்தியன்ஸ் அணி ஆறாவது முறையும் கோப்பை வெல்ல வேண்டும் என்று களமிறங்குகிறது. அதபோல் ஒருமுறை கூட கோப்பை வெல்லாத பெங்களூர் அணி இந்த ஐபிஎல் கோப்பையை வென்றே ஆக வேண்டும் என்று தீவிரம் காட்டுகிறது.


இதற்காக கடந்த பிப்ரவரி 18ம் நடைபெற்ற ஐபிஎல் மினி ஏலத்தில் சிறந்த வீரர்களை தேர்வு செய்து அவர்களுக்கு பயிற்சி கொடுத்து வருகின்றனர்.இந்நிலையில், இந்தாண்டு இந்தியாவிலேயே நடைபெறுவதால் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர். ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக ரசிகர்கள் இன்றி நடத்தப்படும் என்று அறிவித்து இருக்கின்றனர். இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பெங்களூர் அணியின் பிளேயிங் லெவன் இதுபோன்று இருக்க அதிக வாய்ப்பு இருக்கிறது.

Tags:    

Similar News