சென்னை அணியில் இணைந்த மற்றொரு ஆஸ்திரேலியா வீரர்.!

Update: 2021-04-09 08:15 GMT

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்று சென்னையில் தொடங்குகிறது. ஐபிஎல் 14 வது சீசனின் முதல் லீக் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இந்த போட்டியில் மும்பை இன்டியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றனர். இதற்காக இரு அணிகளும் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.


மற்ற ஐபிஎல் அணிகளும் தீவிரமாக ஐபிஎல் தொடருக்காக தயார் ஆகி வரும் நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர் ஹேசல்வுட் தனது தனிப்பட்ட காரணங்களுக்காக தொடரில் இருந்து விலகிய நிலையில் சென்னை அணியில் ஒரு வெளிநாட்டு வீரர் இல்லாத நிலை ஏற்பட்டது.


இந்நிலையில் ஹேசல்வுட்டுக்கு மாற்று வீரர் யார் என்ற கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் மற்றொரு ஆஸ்திரேலியா வீரரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தேர்வு செய்துள்ளது. ஆஸ்திரேலியா அணியின் ப்ளன்ஆஃப்-ஐ மாற்று வீரராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்பொழுது அறிவித்துள்ளது. இது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்களுக்கு பெரிய இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.

Tags:    

Similar News