பாரா ஒலிம்பிக்கில் 2 தங்கம் வென்ற தமிழக மாணவி!

Update: 2022-05-13 13:13 GMT

பிரேசில் நாட்டில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று மதுரை அவ்வை மாநகராட்சி பள்ளி மாணவி ஜெர்லின் அனிகாவுக்கு மேயர் இந்திராணி மற்றும் கமிஷனர் கார்த்திகேயன் வாழ்த்து கூறியுள்ளனர்.

12ம் வகுப்பு படித்து வரும் ஜெர்லின் அனிகா செவி மாற்றுத்திறனாளியாவார். இவர் பிரேசில் நடைபெற்ற 24வது பாரா ஒலிம்பிக் பேட்மின்டன் போட்டியில் ஒற்றையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவில் தலா ஒரு தங்க பதக்கத்தை வென்றார். மேலும், இந்திய அணியின் பேட்மின்டர் குழு போட்டியிலும் ஒரு தங்கம் வென்றுள்ளார்.

இந்த மாணவி ஏற்கனவே கடந்த 2018ம் ஆண்டு மலேசிய ஆசியா பசிபிக் பேட்மின்டன் சாம்பின்ஷிப் போட்டியிலும் 2 வெள்ளி, ஒரு வென்கணல பதக்கமும், சீனாவில் நடைபெற்ற போட்டியில் ஒரு தங்கப்பதக்கமும் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source, Image Courtesy: Dinamalar

Tags:    

Similar News