இளையோர் ஆசிய கோப்பை கிரிக்கெட்.. இந்திய அணிக்கு கிடைத்த 2வது வெற்றி..

Update: 2023-07-19 02:46 GMT

தற்பொழுது இளையோர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடைபெற்று வருகிறது. இலங்கையின் தலைநகராக இருக்கும் கொழும்புவில் இந்த ஒரு போட்டி அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் மிகவும் உற்சாகமாக நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்க மொத்தம் எட்டு அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதி வருகின்றனர். நேற்று நடந்த B பிரிவு ஆட்டம் போதில் இந்திய அணி மற்றும் நேபாள அணி இரண்டு அணிகளும் மோதிக்கொண்டது.


இதில் நேபாள அணியை எதிர்கொண்ட இந்தியா மிகவும் சிறப்பாக தன்னுடைய ஆட்டத்தை நடத்தி இருக்கிறது. குறிப்பாக நேபாளத்திற்கு எதிராக இந்திய அணி வெற்றி பெற்று இருக்கிறது. இந்திய அணியின் சார்பில் நிஷாந்த்  நான்கு விக்கெட்டும், மற்ற இரண்டு வீரர்கள் இரண்டு விக்கெட்களையும் வீழ்த்தி இருக்கிறார்கள்.


பின்னர் ஆடிய இந்திய அணி 22.1 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 172 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இருக்கிறது. ஏற்கனவே மற்றொரு லீக் ஆட்டத்தின் பொழுது பாகிஸ்தான் அணி ஐக்கிய அரபு அமீரகத்தை எதிர்கொண்டு வெற்றி பெற்றது. தற்பொழுது இந்திய அணி கடைசி லீக்கில் பாகிஸ்தானை நாளை எதிர் கொள்ள இருக்கிறது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News