இன்று நான்காவது டி-20 போட்டியில் மூன்று மாற்றங்களுடன் இந்திய அணி.!

Update: 2021-03-18 05:30 GMT

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து டி-20 போட்டிகள் கொண்ட தொடர் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் மூன்று டி-20 போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் முதல் டி-20 போட்டியில் இங்கிலாந்து அணியும் இரண்டாவது டி-20 போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்றது.


மூன்றாவது டி-20 போட்டியில் மீண்டும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இந்நிலையில் இன்று இந்த தொடரின் நான்காவது டி-20 போட்டி அதே அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறவில்லை என்றால் இங்கிலாந்து அணி தொடரை வெல்லும் என்ற நிலையில் இந்த போட்டியை இந்திய அணி சந்திக்கிறது. இந்த போட்டியில் இந்த அணியில் மூன்று முக்கிய வீரர்கள் மாற்றம் செய்யப்பட்ட வாய்ப்புள்ளது.


தொடர்ந்து சொதப்பி வரும் கே.எல் ராகுலுக்கு பதிலாக சூரியக்குமார் மீண்டும் அணியில் இணைய வாய்ப்புள்ளது. அதேபோல் சுழல் பந்துவீச்சில் தொடர்ந்து அதிக ரன்களை கொடுத்து வரும் யுவகேந்திரா சாஹல் பதிலாக ராகுல் சாஹர் அல்லது ராகுல் திரிபாதி களம் இறங்க வாய்ப்பு உள்ளது. அதேபோல் ஷர்துல் தாகூர் பதிலாக நந்திப் சைனி களம் இறங்குவார் என தெரிகிறது. இந்த மாற்றங்களுடன் களம் இறங்கும் இந்திய அணி இந்த போட்டியை வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

Tags:    

Similar News