இந்தியா VS பாகிஸ்தான்.. ஆட்டம் இனிமேல் தான் ஆரம்பம்..

Update: 2023-07-20 03:37 GMT

சர்வதேச கிரிக்கெட்டை பொறுத்தவரை இந்தியா - பாகிஸ்தான் இடையிலான ஆட்டத்திற்கு இணையாக எந்த ஆட்டமும் ஈடாக இருக்காது. எனது இந்திய ரசிகர்களின் இருந்த பாகிஸ்தான் ரசிகர்கள் வரை அனைவருமே எந்த நாடு முன்னிலையில் வகிக்கும் என்பதை பார்ப்பதற்கு மிகவும் ஆர்வமாக இருப்பார்கள். இந்தியா மற்றும் பாகிஸ்தான் ரசிகர்கள் மட்டுமல்லது உலக அளவில் உள்ள ரசிகர்களும் இந்திய பாகிஸ்தான் விளையாட்டை பார்ப்பதற்கு ஆர்வமாக தான் இருக்கிறார்கள். 


ஒவ்வொரு பந்துக்கும் பரபரப்பு பதற்றமும் எகிறும். ஆனால் பல்வேறு சந்தர்ப்ப சூழ்நிலைகளின் போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரண்டு நாடுகளும் மோதுவதற்கு அந்நாட்டின் சூழ்நிலைகள் போதுமான பகுதியில் அமையவில்லை இந்நிலையில் ஆசியக் கோப்பையை நடத்தும் உரிமை பாகிஸ்தானுக்கு சென்றது. ஆனால் இந்திய கிரிக்கெட் வாரியம் தரப்பில் ஆசிய கோப்பை போட்டியை ஹைபிரிட் மாடலில் நடத்த கோரிக்கை வைத்தது. அதாவது ஒரு ஆட்டத்தை பாகிஸ்தானிலும், அடுத்த பாதி ஆட்டத்தை பொதுவான இடங்களிலும் வைக்க கோரிக்கை முன் வைத்தது.


இதன்பின் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் பிசிசிஐ கோரிக்கையை ஏற்றது. இதனால் ஆசியக் கோப்பைத் தொடர் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. பாகிஸ்தானில் 4 போட்டிகளையும், இலங்கையில் 9 போட்டிகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் மூன்று முறை இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொள்ள இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News