1000 கேலோ இந்தியா மையங்கள் உருவாக்குவதற்கான முன்னோட்டம்.. மோடி அரசு செய்யும் சாதனை..

Update: 2023-10-23 03:22 GMT

மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் ஹரியானாவில் 15 கேலோ இந்தியா விளையாட்டு மையங்களை தொடங்கி வைத்தனர். மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் மற்றும் ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் இணைந்து ஹரியானாவில் மொத்தம் 15 கேலோ இந்தியா விளையாட்டு மையங்களை நேற்று முன்தினம் தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் செயல் இயக்குநர் திருமதி லலிதா சர்மா மற்றும் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த பிற அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


நாடு முழுவதும் 1000 கேலோ இந்தியா மையங்கள் உருவாக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் அதன் ஒரு பகுதியாக இந்த மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், ஹரியானாவில் அமைக்கப்பட்டுள்ள இந்த 15 கேலோ இந்தியா மையங்கள் எதிர்கால சாம்பியன்களை தயார்படுத்த உதவும் என்றார்.


கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளில் ஹரியானா முன்னணி இடத்தில் உள்ளது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். நாட்டின் விளையாட்டு சாதனைகளுக்குப் பங்களிப்பதில் ஹரியானா முக்கிய பங்கு வகிக்கிறது என்றும் அவர் தெரிவித்தார். கேலோ இந்தியா திட்டத்தின் மூலம், மத்திய அரசு விளையாட்டு வீரர்களுக்கு சிறந்த முறையில் ஆதரவளித்து வருவதாக திரு அனுராக் சிங் தாக்கூர் கூறினார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News