இந்தியா ஆஸ்திரேலியா மோதும் 20 ஓவர் கிரிக்கெட் தொடர் - ரசிகர்கள் எதிர்பார்ப்பு?

20 ஓவர் கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இன்று இரவு மோதிக்கொள்ள இருக்கிறது.

Update: 2022-09-21 00:33 GMT

இந்தியாவின் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அருண் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடர் வெறும் ஆறு நாட்களில் முடிவடைந்து விடுகிறது. இதன்படி இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது டி20 போட்டி பஞ்சாப் மாநில மெகாவில் இன்று இரவு அரங்கேறுகிறது. இதையொட்டி இரு அணியினரும் கடந்த சில நாட்களாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு உள்ளார்கள்.


ஆசிய கோப்பை தோல்விக்கு பிறகு இந்திய விளையாடும் முதல் போட்டி இதுவாகும். அடுத்த மாதம், 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ள நிலையில் தங்களை சீரிய முறையில் தயார்படுத்திக் கொள்ள இந்த தொடர் உதவிகரமாக இருக்கும் என்று இந்திய அணியின் சார்பில் கூறப்பட்டுள்ளது..மீண்டும் அசத்துவாரா விராட் கோலி? என்ற ஒரு கேள்வியும் ரசிகர்கள் மனதில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் ஆசிய கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் சதம் விலாசி மீண்டும் ஒரு புதிய பார்மிற்கு விராட் கோலி பேட்டிங் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. மேலும் ஆசிய கிரிக்கெட்டில் மந்தமாக ஆடியதால் விமர்சிக்கப்பட்ட ராகுல் அதற்கு பரிகாரம் தேட வேண்டிய நெருக்கடியில் உள்ளார்.


மிடில் வரிசை தான் இந்தியாவுக்கு எப்போதும் மிச்சம் படி இருப்பதில்லை. அதை சரி செய்வதற்காக இந்த முறை கூடுதல் கவனம் செலுத்துவார் என்றும் நம்பலாம். ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா காயத்தின் காரணமாக இடம்பெறாத நிலையில் மற்றொரு ஆல் ரவுண்டர் ஹர்பிக் பாண்டியா தாக்கத்தை ஏற்படுத்தினால் அது அணிக்கு உற்சாகம் தரும். மொத்தத்தில் இரு அணிகளும் சரிசம பலத்துடன் மல்லு கட்டுவதால் ஆட்டத்தில் விறுவிறுப்பு ஏற்படுவதற்கு பஞ்சமே இருக்காது. ரசிகர்கள் மனதிலும இந்த தொடரிலும் இந்தியா வெல்வதற்கான தங்கள் பிரார்த்தனை செய்வதாகவும் கூறுகிறார்கள்.

Input & Image courtesy: Thanthi News

Tags:    

Similar News