3-வது கேலோ குளிர்கால விளையாட்டு - தொடங்கி வைத்த மத்திய அமைச்சர்!

3-வது கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டுப் போட்டிகளை குல்மார்கில்vதொடங்கி வைத்தார் மத்திய அமைச்சர்.

Update: 2023-02-12 04:12 GMT

மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், 3-வது கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டுப் போட்டிகளை குல்மார்கில் தொடங்கி வைத்தார். ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, முக்கிய பிரதிநிதிகள், இளம் வீரர்கள், பயிற்சியாளர்கள், விழாவில் கலந்து கொண்டனர். பிரதமர் நரேந்திர மோடி, விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் காணொலி நிகழ்ச்சியில் ஒலிபரப்பப்பட்டது. மேலும், வெள்ளைப் புறாக்கள் பறக்கவிடப்பட்டன. பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நிகழ்த்தப்பட்டன.


தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் 40 கேலோ இந்தியா மையங்கள், காணொலிக் காட்சி மூலம் திறந்துவைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், இந்த 40 கேலோ இந்தியா மையங்களை திறந்துவைக்கும் போது பலமான கரவொலிகளை நான் கேட்டேன். பிரதமர் வெளியிட்டுள்ள காணொலி செய்தியில், ஜம்மு காஷ்மீர் பகுதிக்கு விளையாட்டுத் துறைக்கு கடந்த 3 ஆண்டுகளில், மேற்கொள்ளப்பட்ட பணிகள் பாராட்டுக்குரியது என்பதை மேற்கோள் காட்டினார்.


ஜம்மு காஷ்மீர் விளையாட்டுத் துறைக்கு தேவையான நிதி உதவியை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம், தொடர்ந்து வழங்கி வருகிறது. குளிர்கால விளையாட்டுக்கான ஆற்றல் சார் மையம் இங்கு விரைவில் திறக்கப்பட உள்ளது என்று தெரிவித்தார்.  ஜம்மு காஷ்மீரில் நடைபெறும் 3வது கேலோ இந்தியா தேசிய குளிர்கால விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். 

Input & Image courtesy: News

Tags:    

Similar News