44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜோதியை ஏற்றி வைக்கும் பிரதமர் - தி.மு.க அமைச்சர் மெய்யநாதன் கூறியதென்ன?

Update: 2022-06-19 00:39 GMT

மால்லபுரத்தில் நடைபெறும் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஒலிம்பிக் ஜோதியை வருகின்ற ஜூன் 19ம் தேதி டெல்லி இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் பிரதமர் மோடி ஏற்றி வைப்பதாக தமிழக அமைச்சர் மெய்யநாதன் கூறியுள்ளார். இந்த ஜோதி நாடு முழுவதும் பயணித்து ஜூலை 28ம் தேதி சென்னைக்கு வந்தடைய உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், கீழாத்தூரில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை தமிழக விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் திறந்த வைத்த பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகின்ற ஜூலை 28ம் தேதி மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. இதனையொட்டி நாளை மறுநாள் 19ம் தேதி டெல்லியில் இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் பிரதமர் மோடி ஒலிம்பிக் ஜோதியை ஏற்றி தொடங்கி வைக்கிறார்.

இந்த ஜோதியானது நாடு முழுவதும் சுமார் 75 பெரு நகரங்களுக்கு சென்ற பின்னர் வருகின்ற ஜூலை 28ம் தேதி தமிழகத்திற்கு கொண்டு வரப்படுகிறது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.

Source, Image Courtesy: News 18 Tamilnadu

Tags:    

Similar News