சென்னை சேப்பாகம் மைதானத்தில் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு 50% பார்வையாளர்களுக்கு அனுமதி!

சென்னை சேப்பாகம் மைதானத்தில் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு 50% பார்வையாளர்களுக்கு அனுமதி!

Update: 2021-02-02 11:23 GMT

இந்தியாவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி நான்கு டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஐந்து டி-20 போட்டிகள் மற்றும் மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் சென்னை சேப்பாகம் மைதானத்தில் நடைபெற உள்ளது. அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகள் அகமதாபாத் மைதானத்தில் நடைபெற உள்ளது. 

இதைத்தொடர்ந்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மார்ச் 12ம் தேதி அகமதாபாத் மைதானத்திலும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மார்ச் 23ம் தேதி புனே மைதானத்திலும் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

தற்போது முதலில் நடைபெறயிருக்கும் இரண்டு டெஸ்ட் போட்டிக்கான இந்தியா மற்றும் இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுயிருக்கிறது. இரு அணிகளிலும் பல்வேறு மாற்றங்களும் செய்யப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் முதல் டெஸ்ட் போட்டி சென்னை எம் ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற உள்ள நிலையில் கொரோனா தொற்று காரணமாக இந்த போட்டிக்கு பார்வையாளர்கள் அனுமதி மாறுக்கப்பட்டு இருந்தது. இது சென்னை ரசிகர்களிடையே பெரிய சோகத்தை ஏற்படுத்திய நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியும் சென்னை மைதானத்தில் நடைபெற உள்ள நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு 50% பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

Similar News