ஆப்கானிஸ்தானில் விமானத்தில் தொங்கி சென்று கீழே விழுந்த கால்பந்து வீரர்!

ஆப்கானிஸ்தான் நாட்டில் தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். இதனால் அந்நாட்டில் உள்ள மக்கள் தாலிபான் தீவிரவாதிகளின் அச்சுறுத்தலுக்கு பயந்து வெளிநாடுகளுக்கு தப்பிச்சென்று வருகின்றனர்.

Update: 2021-08-20 13:25 GMT

ஆப்கானிஸ்தான் நாட்டில் தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். இதனால் அந்நாட்டில் உள்ள மக்கள் தாலிபான் தீவிரவாதிகளின் அச்சுறுத்தலுக்கு பயந்து வெளிநாடுகளுக்கு தப்பிச்சென்று வருகின்றனர்.

அதே போன்று கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்னர் காபூலில் இருந்து கிளம்பிய ராணுவ விமானம் ஒன்றில் படிக்கட்டுகளிலும், சக்கரங்களிலும் தொங்கியபடி பயணம் செய்தனர். அப்போது விமானத்தில் தொங்கி சென்ற 3 பேர் அடுத்தடுத்து கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், விமானத்தில் இருந்து விழுந்த ஒருவரில் ஆப்கான் கால்பந்து அணி வீரர் ஒருவர் என தெரியவந்துள்ளது. அவரின் பெயர் ஜகி அன்வர் எனவும், விமான நிலையத்தில் தரையிறங்கும்போது கண்டுப்பிடிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Source: Dinakaran

Image Courtesy: Hindu Tamil

https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=699301

Tags:    

Similar News