இந்தியா – ஆஸ்திரேலியா தொடரில் இருந்து மற்றொரு வீரர் விலகல்.!
இந்தியா – ஆஸ்திரேலியா தொடரில் இருந்து மற்றொரு வீரர் விலகல்.!
ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையேயான டி-20 தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. ஏற்கனவே ஒரு நாள் போட்டி தொடரை 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா அணி வென்ற நிலையில் முதல் டி-20 போட்டியில் வெற்றி பெற்று டி-20 தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது.
முதல் இரண்டு போட்டிகளில் தொடர்ந்து வெற்றி கண்ட ஆஸ்திரேலியா அணி மூன்றாவது ஒரு நாள் போட்டி மற்றும் முதல் டி-20 என தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருகின்றது.
இந்நிலையில் காயம் காரணமாக வீரர்கள் தொடரில் இருந்து தொடர்ந்து விலகி வருகின்றனர். முதல் டி-20 போட்டியில் தலையில் அடிப்பட்ட நிலையில் ஜடேஜா டி-20 தொடரில் இருந்து விலகி உள்ளார். ஏற்கனவே ஒரு நாள் போட்டியில் அடைந்த காயம் காரணமாக ஆஸ்திரேலிய அணியின் பிரதான டேவிட் மற்றும் டி20 போட்டியில் இருந்து விலகினார். அவருக்கு பதிலாக ஷார்ட் அணியில் இணைந்துள்ளார்.
தற்போது மற்றொரு வீரரான ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர் முதல் டி20 போட்டியில் அடைந்த காயம் காரணமாக ஆஷ்டன் அகர் தற்போது எஞ்சியுள்ள 2 டி20 போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.
அவருக்கு பதிலாக மாற்று வீரராக நேதன் லையன் டி20 அணியில் இடம்பிடித்துள்ளார். இதனால் 2-வது மற்றும் 3-வது போட்டியில் அவரே ஜாம்பாவுடன் இணைந்து பந்து வீசுவார் என்று தெரிகிறது அது மட்டுமன்றி ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பின்ச்சுக்கு ஏற்பட்ட காயம் குறித்தும் கவலை கொண்டுள்ளது. அவரும் காயத்தில் இருந்து விலகினால் அணியை ஸ்டீவ் ஸ்மித் வழிநடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.