ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றம்: கங்குலி அறிவிப்பு!

Update: 2022-07-22 10:45 GMT

இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், இலங்கை உட்பட 6 அணிகள் பங்கேற்கின்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 27ம் தேதி முதல் செப்டம்பர் 11ம் தேதி வரையில் இலங்கையில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டது.

ஆனால் இலங்கையில் நிலவுகின்ற பொருளாதார நெருக்கடி மற்றும் மக்கள் போராட்டத்தால் அங்கு போட்டியை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. இலங்கை கிரிக்கெட் வாரியமும் தாங்கள் தற்போதைய நிலையில் போட்டியை நடத்த முடியாத சூழலில் இருக்கிறோம் என்று ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிடம் தகவலை கூறியது.

இந்நிலையில், ஆசிய கோப்பை போட்டி இலங்கையில் இருந்து ஐக்கிய அரசு அமீரகத்துக்கு மாற்றப்படுகிறது என்று இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி செய்தியாளர்களிடம் கூறினார்.

Source: Maalaimalar

Image Courtesy:The Indian Express

Tags:    

Similar News