பிங்க் பால் டெஸ்ட் போட்டியில் தனது 400வது டெஸ்ட் விக்கெட்டை வீழ்த்தி புதிய சாதனை படைத்த அஸ்வின்.!

பிங்க் பால் டெஸ்ட் போட்டியில் தனது 400வது டெஸ்ட் விக்கெட்டை வீழ்த்தி புதிய சாதனை படைத்த அஸ்வின்.!

Update: 2021-02-26 07:00 GMT

இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி உலகின் மிக பெரிய மைதானமான அகமதாபாத் மொட்ரா மைதானத்தில் நடைபெற்ற வரும் நிலையில் இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது.

முதலில் விளையாடிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர் க்ரவுலி தவிர மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் அவுட் ஆக இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 112 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அகமதாபாத் மைதானத்தில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டி என்பதால் இந்த மைதானம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் இந்த போட்டிக்கு முன்பு பல கருத்துக்கள் நிலவி வந்த நிலையில் இந்த மைதானம் முழுமையாக சுழல்பந்து வீச்சிற்கு சாதகமாக இருந்து வருகின்றது. இந்நிலையில் முதல் இன்னிங்சில் அக்சர் படேல் 6 விக்கெட்களை வீழ்த்தினர். அஸ்வின் முதல் இன்னிங்சில் மூன்று விக்கெட் வீழ்த்தினர். பின்னர் விளையாடிய இந்தியா அணியில் தொடக்க வீரர் ரோஹித் சர்மா மட்டுமே அரைசதம் வீளாசினார். இங்கிலாந்து அணியின் சுழல் பந்து வீச்சாளர்களும் இந்திய அணிக்கு மிகவும் நெருக்கடி கொடுக்க ரூட்டின் பந்து வீச்சில் ஐந்து விக்கெட் வீழ்த்தினர்.

145 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணியின் சுழல்பந்து வீச்சாளர் அஸ்வின் விக்கெட்கள் வீழ்த்திய நிலையில் 400 டெஸ்ட் விக்கெட் வீழ்த்தி புதிய சாதனையை இந்த டெஸ்ட் போட்டியில் படைத்துள்ளார்.

Similar News