கொரோனாவில் இருந்து குணமடைந்து டெல்லி அணியில் இணைந்த அக்சார் பட்டேல்.!

மீண்டும் 2வது கட்டமாக கொரோனா பரிசோதனை செய்ததில் ஏப்ரல் 3ம் தேதி தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.

Update: 2021-04-23 12:55 GMT

சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் அக்சார் பட்டேல் கடந்த மாதம் மார்ச் 28-ம் தேதி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் இணைந்தார். அப்போது அவருக்கு கொரோனா தொற்று இல்லை.

மீண்டும் 2வது கட்டமாக கொரோனா பரிசோதனை செய்ததில் ஏப்ரல் 3ம் தேதி தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.


 



இந்நிலையில், தற்போது அவர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தார். இதனையடுத்து அவர் மீண்டும் டெல்லி அணியுடன் இணைந்தார். ஆனாலும், டெல்லி ஆடும் லெவன் அணியில் இணைவதற்கு கூடுதல் நாட்கள் ஆகும் எனக் கூறப்படுகிறது.

Similar News