நண்பர்களாக மாறிய விராட் கோலி - பாபர் அசாம்: ஆசிய கோப்பை தொடரில் சுவாரஸ்யம்!

நண்பர்கள் ஆக்குமாறு விராட் கோலி மற்றும் பாபர் அசாம் காரணமாக ஆசிய கோப்பை தொடரில் கூடும் சுவாரஸ்யம்.

Update: 2022-08-25 12:31 GMT

ஆசியக் கோப்பை தொடர் வருகின்ற இருபத்தி எட்டாம் தேதி நடைபெற உள்ள நிலையில், இந்தத் தொடருக்காக அமீரகம் சென்றடைந்த இந்திய வீரர்கள் நேற்று முதல் பயிற்சியில் ஈடுபடத் தொடங்கினார்கள். இந்திய அணி பயிற்சியைப் பொறுத்தவரை தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிற்கு தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், அவருக்கு பதிலாக ரோஹத் சர்மா தலைமையில் தற்போது இந்திய அணி பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றது. இதில் இந்திய வீரர்களான விராட் கோலி ரோகித் சர்மா அவர்கள் பயிற்சியில் ஈடுபடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.


இந்திய அணியின் விராட் கோலி மற்றும் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் ஆகிய மைதானத்தில் நேருக்கு நேராக சந்தித்து, கைகுலுக்கி வரவேற்று இருக்கிறார்கள். இதனை தொடர்ந்து இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டு தொடர்ந்து நட்பாக பழகி வருகிறார்கள். இதன் காரணமாக விராட் கோலி மற்றும் பாபர் இடையான ஆட்டங்கள் எப்படி அமையும்? என்பது குறித்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


பாபர் அட்டகாசமான ஃபார்மில் உள்ள சூழலில், விராட் கோலி தனது கம்பேக்கை கொடுப்பதற்காக முயன்று வருகிறார். இப்படி இருக்க கூடிய சூழ்நிலையில் தான் இருவரும் எந்தவிதமான போட்டியும் இல்லாமல் தற்போது சகஜமாகப் பேசி வருகிறார்கள் இதைப்போல ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கானுடனும், விராட் கோலி நட்பு பாராட்டி இருக்கிறார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News