வீரர்களை பிரதமர் பாராட்டுவது இந்தியாவில் மட்டுமே சாத்தியம்: பேட்மிண்டன் வீரர் ஷிராக் ஷெட்டி நெகிழ்ச்சி!

Update: 2022-05-18 11:12 GMT

தாமஸ் கோப்பை பேட்மிண்டன் வெற்றி வீரர்கள் அனைவரையும் பிரதமர் மோடி பாராட்டுவது இந்தியாவில் மட்டுமே சாத்தியம் என தாமஸ் கோப்பை பேட்மிண்டன் வீரர் ஷிராக் ஷெட்டி நெகிழ்ச்சி அடைந்துள்ளார்.

கடந்த 73 ஆண்டுகள் வரலாற்றில் முதன் முறையாக இந்திய அணி பட்டத்தை வென்று சாதனை படைத்தது. இவர்களுக்கு பிரதமர் மோடி உட்பட பல தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். அது மட்டுமின்றி மே 15ம் தேதி இந்திய விளையாட்டு வரலாற்றில் பேட்மிண்டன் வரலாற்றுப் புத்தகத்தில் பொன்னால் எழுதப்பட வேண்டிய பொன்னாள் ஆனது.

இந்நிலையில், இந்திய பேட்மிண்டன் அணியின் அனைத்து வீரர்களையும், பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்துக்களை கூறினார். இது தொடர்பாக பேட்மிண்டன் வீரர் ஷிராக் ஷெட்டி பெருமிதத்துடன் கூறினார். ஒரு அணி வெற்றி பெற்றதும் வெற்றிக்கு பின்னர் பிரதமர் அந்த அணியுடன் தொடர்பு கொண்டு பேசுவதை இதுவரை நான் பார்த்ததே இல்லை. இது நமது நாட்டில் மட்டுமே சாதனை. இது எங்களை ஊக்கப்படுத்தி புதிய நிலைக்கு கொண்டு சென்றது. இவ்வாறு அவர் கூறினார்.

Source, Image Courtesy: News 18 Tamilnadu

Tags:    

Similar News